Wednesday 6 July 2016

சிவம் - உருவநிலை 1


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிவம் - உருவநிலை  1

சேயிடைச் செல்வர் (சோமாசுகந்தர்)




சேயிடைச் செல்வர் என்பது சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று. சிவனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் சிறு குழந்தையாக முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலமேசோமாசுகந்தர் வடிவம் எனப்படும்.
சூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சசிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க சிவபெருமான் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள்.
ஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சேயிடைச் செல்வர் என்று அழைக்கின்றார்கள்.
திருவாரூர் தியாகராச சுவாமி கோயில்,
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில்,
குமரக்கோட்டம்,
காமாட்சியம்மன் கோயில்,
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
உள்ளிட்ட பல தலங்களில் சோமாசுகந்தர் வடிவத்தை தரிசிக்கலாம்
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment