Wednesday 6 July 2016

சிவம்

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சிவம்

முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள 

அருவம், 
அருவுருவம், 
உருவம் 

ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; 

அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; 

உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப்பர். 

இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.

அருவம், உருவம் மற்றும் அருவுருவம் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்திப்போம்.

 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment