Saturday 12 March 2016

நாயன்மாரில் பெண்கள் - 3

திருச்சிற்றம்பலம் 
சைவா போற்றி, தலைவா போற்றி!


நாயன்மாரில் பெண்கள்  - 3

இசைஞானியார் நாயனார் 

"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்" 
- திருத்தொண்டத் தொகை


பூசை_நாள் = சித்திரை சித்திரை
அவதாரத்_தலம் = ஆரூர் (கமலாபுரம்) 
முக்தித்_தலம் = திருநாவலூர்


திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் ''இசைஞானியார்''. அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். 

திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

இறைவனின் குழ்ந்தைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது
என்பதையே நாயன்மார்களில் பெண்கள் என்கிற பதிப்பு நமக்கு உணர்த்துகிறது.
மாதொரு பாகனான நம்பெருமான் தன் அடியார்கள் மூலமும் நமக்கு உணர்த்துகிறார்.

ஆடக மதுரை அரசே போற்றி
கூட விளழ்ந்கு குருமணி போற்றி


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment