Tuesday 8 March 2016

சிவம் - அருவநிலை

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சிவம் - அருவநிலை

இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாகவும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. 

நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்குவர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் எனவும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்குவர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞானவடிவம் கொண்டது.

நாளை முதல் சிவ உருவங்களை சிந்திப்போம்.

 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment